நகரம் நனைந்திருக்கிறது. நல்ல மழை. இடைவிடாமல் மூன்று தினங்களாகப் பெய்துகொண்டிருப்பதால் அனைத்துச் சாலைகளும் குறைந்தபட்சம் கணுக்கால் அளவு நீருக்கு அடியில்தான் இருக்கின்றன. பல இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர். நேற்றைக்குச் சற்று அதிகம். சுரங்கப்பாதைகளெல்லாம் நீச்சல் குளங்கள் போல் ஆகியிருக்கின்றன. மாம்பலத்தை தியாகராயநகருடன் இணைக்கும் அரங்கநாதன், கோவிந்தன் சுரங்கப்பாதைகள் இரண்டும் நிரம்பித் ததும்புகின்றன. போக்குவரத்து நின்றுவிட்டது. அவ்வண்ணமே பழவந்தாங்கல் பக்கமுள்ள சுரங்கங்களும். எப்போதும் வட சென்னைதான் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு காணும். இம்முறை போட்டிக்குத் தென் சென்னையும் … Continue reading மூன்று விஷயங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed